ஆயிரம் இரவுகளைக் கழித்துவிட்டேனடி..
கனவுகளிலே உன் கரம் பற்றி..
ஆயிரம் உறவுகளை ஒதுக்கிவிட்டேனடி..
உன்னோருத்தி உறவே போதுமென்று..
ஆயிரம் தருணங்களை இழந்துவிட்டேனடி..
என் காதல் முழுவதையும் கொட்டிவிட வாய்ப்பிருந்தும்..
ஆயிரம் ஜென்மமும் பிறந்திருப்பேனடி..
உன்னை மனம் முடிக்கும் முடிவோடு..
என் வாழ்நாள் முழுதும் காதிருப்பேனடி..
உன் விழியசைத்து எனை ஏற்றுக் கொள்வாயென…
பகலவன் நிலவிடம் நிதமும் சொல்லும் கவி இது…
Friday, September 17, 2010
கல்லூரி நட்பு..
அன்று..
குழு குழுவாய் திரிந்தோம்..
கூத்தடித்து கிடந்தோம்..
பேசாத நாள் இல்லை..
போகாத இடம் இல்லை..
பார்க்காத படம் இல்லை..
ரசிக்காத பெண் இல்லை..
கவலைகள் ஏதும் இல்லை..
துன்பத்தை கண்டதில்லை..
இன்று..
புழு புழுவாய் நெளிகின்றோம்..
பணிகளுடன் போரிடுகிறோம்..
பேசக்கூட நேரம் இல்லை..
பார்ப்பதற்கும் வழி இல்லை..
என்றாவது இணைக்கின்றது
நாம் அன்று இணைந்து வாங்கிய
கைபேசி..
புது நண்பர்கள் கிடைத்தாலும்..
உயிர் நண்பர்களுக்கு ஈடாகுமோ..
தோழர்களே..
தொலைதூரம் போனாலும்..
தொடர்புடன் நாம் நட்பு கொள்வோம்…
குழு குழுவாய் திரிந்தோம்..
கூத்தடித்து கிடந்தோம்..
பேசாத நாள் இல்லை..
போகாத இடம் இல்லை..
பார்க்காத படம் இல்லை..
ரசிக்காத பெண் இல்லை..
கவலைகள் ஏதும் இல்லை..
துன்பத்தை கண்டதில்லை..
இன்று..
புழு புழுவாய் நெளிகின்றோம்..
பணிகளுடன் போரிடுகிறோம்..
பேசக்கூட நேரம் இல்லை..
பார்ப்பதற்கும் வழி இல்லை..
என்றாவது இணைக்கின்றது
நாம் அன்று இணைந்து வாங்கிய
கைபேசி..
புது நண்பர்கள் கிடைத்தாலும்..
உயிர் நண்பர்களுக்கு ஈடாகுமோ..
தோழர்களே..
தொலைதூரம் போனாலும்..
தொடர்புடன் நாம் நட்பு கொள்வோம்…
வள்ளுவரும் வினோத்தும்..


ஆனா பாருங்க அதெல்லாம் திருக்குறள விட குழப்புது..
நேத்து MTC bus ல போகும்போது ஒரு குறளைப் படிச்சேன்..அப்போதான் தமிழ்கிறுக்கனான எனக்கு இந்த சந்ததிகளுக்கு
ஏத்தது போல தெளிவா விளக்கம் எழுதலாமேன்னு தோனிச்சு..
விதி யார விட்டது.. இதையும் நீங்க படிச்சுதானே ஆகணும்..
பின்குறிப்பு:பாப்பையா sir, தயவுசெஞ்சு என்ன மன்னிச்சுடுங்க..
நாம start பண்ணலாமா..
Voice 1:(He.. He.. குறள் ௧ (தமிழ்ல க என்றால் ஒன்று) .. )
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.
நம்ம Explanation:
Wifekkita மானே தேனேன்னு தாஜா பண்ணமா ஓவரா சவுண்ட்
விட்டீனா மகனே வீட்ட சாத்திகிட்டு உனக்கு ஊமைகுத்தா விடுவான்னு வள்ளுவர் சொல்லிருக்காரு..
(சத்தியமா நான் சொல்லல)
Voice 2:
யான் நோக்குங்கால் நிலம்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகரும்.
நம்ம Explanation:
இதுதாங்க 2000 வருஷத்துக்கு முன்னாடியே வள்ளுவர் நம்ம தமிழ் பொண்ணுங்களபத்தி சொல்லிருக்க குறள்.நாம look விடும்போது என்னமோ நிமிர்ந்தே பாக்காத பொண்ணுங்க போல
scene போட்டுகிட்டு தரையே பார்ப்பாங்க.நாம look விடுறத நிறுத்திட்டு வேற பக்கம் பார்த்தா அவளுங்க நாம பார்க்காதத தெரிஞ்சுகிட்டு நம்மள பார்த்து விடுவாளுங்க பாருங்க look.sightna sightu அப்படி ஒரு sight.இதையும் நான் சொல்லலேங்க வள்ளுவர்தான்.
Voice 3:
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
நம்ம Explanation:
என்னதான் நம்ம close friend ஒரு பொண்ண பத்தி நம்மகிட்ட build up விட்டாலும்
நாம நேர்ல போய் கிட்ட நின்னு பார்த்துதான் அது superb figurea இல்ல சுமாரான figureanu முடிவு பண்ணனும்.
Thursday, September 16, 2010
என் அன்பே உனக்காக.. (5)
இரவே.. இரவே..
விடியாதே..விடியலே வேண்டாம்..
நீ என்னுடனே இரு..
கனவுகள் பகலில் வருவதில்லை..
என்னவளும் நேரில் வருவதில்லை..
நீ இருந்தாலே கனா வரும்..
கனவினிலேதான் என் கன்னி வருவாள்..
ஆகையால் என்னருமை
இரவே.. இரவே..விடியாதே..
விடிந்து..என் கனவை கலைக்காதே..
விடியாதே..விடியலே வேண்டாம்..
நீ என்னுடனே இரு..
கனவுகள் பகலில் வருவதில்லை..
என்னவளும் நேரில் வருவதில்லை..
நீ இருந்தாலே கனா வரும்..
கனவினிலேதான் என் கன்னி வருவாள்..
ஆகையால் என்னருமை
இரவே.. இரவே..விடியாதே..
விடிந்து..என் கனவை கலைக்காதே..
என் அன்பே உனக்காக.. (4)
ஏதோ ஓர் ஞாபகம் நீ என்னருகில் இருப்பதாய்..
பேருந்தின் ஜன்னல் வழியே
உனைப் பார்த்து சிரிக்கிறேன்..
படுக்கையறையில் பக்கத்துத் தலையணையாக
உனைப் பார்த்து மயங்குகிறேன்..
காய்ச்சலின் கதகதப்பில்
உன் அணைப்பை உணர்கிறேன்..
கவிதையாய் மழை பெய்கையில்
உன் கால் கொலுசினொலி ரசிக்கிறேன்..
காதோரமாய் காற்று உரசினால்
நீ கண்ணாளா என்றழைப்பதைக் கேட்கிறேன்..
இக்கவி தீட்டும் நேரம் கூட
ஏதோ ஓர் ஞாபகம் நீ என்னருகில் இருப்பதாய்..
பேருந்தின் ஜன்னல் வழியே
உனைப் பார்த்து சிரிக்கிறேன்..
படுக்கையறையில் பக்கத்துத் தலையணையாக
உனைப் பார்த்து மயங்குகிறேன்..
காய்ச்சலின் கதகதப்பில்
உன் அணைப்பை உணர்கிறேன்..
கவிதையாய் மழை பெய்கையில்
உன் கால் கொலுசினொலி ரசிக்கிறேன்..
காதோரமாய் காற்று உரசினால்
நீ கண்ணாளா என்றழைப்பதைக் கேட்கிறேன்..
இக்கவி தீட்டும் நேரம் கூட
ஏதோ ஓர் ஞாபகம் நீ என்னருகில் இருப்பதாய்..
என் அன்பே உனக்காக.. (3)
ஏய் பெண்ணே..
என் கவிதைகள் யாவும்
அழகானது என்கிறாயே..
பேரழகி உன்னைப் பற்றி
எழுதினால் கவிதை மட்டுமல்ல
கிறுக்கல் கூட
அழகாகும் உண்மை
தெரியாதா உனக்கு!!..
என் கவிதைகள் யாவும்
அழகானது என்கிறாயே..
பேரழகி உன்னைப் பற்றி
எழுதினால் கவிதை மட்டுமல்ல
கிறுக்கல் கூட
அழகாகும் உண்மை
தெரியாதா உனக்கு!!..
என் அன்பே உனக்காக.. (2)
என் தேவதையின் பாதங்கள்
என் இல்லம் தொட்டன நேற்று..
இதுவரை இல்லாத பொலிவு
என் அன்னை முகத்தில்..
எப்பொழுதும் பார்த்திரா மகிழ்ச்சி
என் தங்கை மனதில்.
கண்கள் முழுதும் ஆசையுடன்
மனம் முழுதும் பாசமுடன்
இதழ் முழுதும் புன்னகையுடன்
என்றோ உரிமையோடு வரப்போகும்
இல்லத்திற்கு இன்றே வலது
பாதம் பதித்து உள்நுழைந்தாள்
என் அன்பானவள்..
பூத்துக்குலுங்கின மலர்கள்
என் தோட்டத்தில்..
குதித்தாடின மயில்கள்
என் மாடத்தில்..
ஒருநாள் முழுதுமாய்
ஓராயிரம் புன்னகை அவள் முகத்தில்..
எங்கள் உள்ளத்தில்..
போய்வருகிறேன் என விடைபெற்றாள்
மாலையில்..
போய் வா மகளே..
என் மருமகளாய்
வரும் காலம் வெகுதொலைவில்
இல்லையென வாழ்த்தி
விடையளித்தாள் என் அன்னை..
இவையாவும் நடந்தேற ..
எது நடந்தது என்ன நிகழ்ந்தது
என்றறியாமல் கனவுகளிலே
மிதந்துகொண்டு..
கண்கள் குளமாக நின்றேன் நான்..
இனியவளே..
உனை சிறையெடுக்கும் நாள் முதல்
நீதான் என் இல்ல மகாராணி..
அது நிகழ்ந்தேறும் வரை நீ
எங்கள் இதயங்களின் மகாராணி..
என் இல்லம் தொட்டன நேற்று..
இதுவரை இல்லாத பொலிவு
என் அன்னை முகத்தில்..
எப்பொழுதும் பார்த்திரா மகிழ்ச்சி
என் தங்கை மனதில்.
கண்கள் முழுதும் ஆசையுடன்
மனம் முழுதும் பாசமுடன்
இதழ் முழுதும் புன்னகையுடன்
என்றோ உரிமையோடு வரப்போகும்
இல்லத்திற்கு இன்றே வலது
பாதம் பதித்து உள்நுழைந்தாள்
என் அன்பானவள்..
பூத்துக்குலுங்கின மலர்கள்
என் தோட்டத்தில்..
குதித்தாடின மயில்கள்
என் மாடத்தில்..
ஒருநாள் முழுதுமாய்
ஓராயிரம் புன்னகை அவள் முகத்தில்..
எங்கள் உள்ளத்தில்..
போய்வருகிறேன் என விடைபெற்றாள்
மாலையில்..
போய் வா மகளே..
என் மருமகளாய்
வரும் காலம் வெகுதொலைவில்
இல்லையென வாழ்த்தி
விடையளித்தாள் என் அன்னை..
இவையாவும் நடந்தேற ..
எது நடந்தது என்ன நிகழ்ந்தது
என்றறியாமல் கனவுகளிலே
மிதந்துகொண்டு..
கண்கள் குளமாக நின்றேன் நான்..
இனியவளே..
உனை சிறையெடுக்கும் நாள் முதல்
நீதான் என் இல்ல மகாராணி..
அது நிகழ்ந்தேறும் வரை நீ
எங்கள் இதயங்களின் மகாராணி..
என் அன்பே உனக்காக.. (1)
என்னவளே..
என்னடி கேள்வி இது..
நான் எப்படி கவியானேனா..
காதல் வந்தால் கல்லுக்குள்ளும் கவி பிறக்கும்..
கம்பனுக்குள் கேட்கவா வேண்டும்..
பிறப்பாலே கம்பன் நான்..
உன் பார்வையாலே கவி காளிதாசனும் ஆனேன் நான்..
என்னடி கேள்வி இது..
நான் எப்படி கவியானேனா..
காதல் வந்தால் கல்லுக்குள்ளும் கவி பிறக்கும்..
கம்பனுக்குள் கேட்கவா வேண்டும்..
பிறப்பாலே கம்பன் நான்..
உன் பார்வையாலே கவி காளிதாசனும் ஆனேன் நான்..
என் அன்பே உனக்காக..
கண்களினால் பேசக் கற்றுத்தந்தாய்..
கவிதைகளும் எழுதக் கற்றுத்தந்தாய்..
கற்பனைகள் செய்யக் கற்றுத்தந்தாய் ..
கனவுகளில் வாழக் கற்றுத்தந்தாய் ..
இருபது வருடமும் பார்த்திரா
இயற்கையின் மாற்றம் எனக்குள் தந்தாய்..
நட்புடன்தான் வந்து நின்றேன்
நாளாகக் காதலை எனக்குள் தந்தாய்..
காதலையும் கொண்டு வந்தேன் .
கண்ணே தாயாகவே மாறிப் போனாய்..
எத்தகைய தவமும் செய்வேன்
அன்பே இத்தைகைய வரம் ஒன்றிற்காக..
எத்தனை ஜென்மம் கொண்டாலும்
அழகே எனக்காக நீயும் வேண்டும்..
என் உறவாக.. என் உயிராக..
கவிதைகளும் எழுதக் கற்றுத்தந்தாய்..
கற்பனைகள் செய்யக் கற்றுத்தந்தாய் ..
கனவுகளில் வாழக் கற்றுத்தந்தாய் ..
இருபது வருடமும் பார்த்திரா
இயற்கையின் மாற்றம் எனக்குள் தந்தாய்..
நட்புடன்தான் வந்து நின்றேன்
நாளாகக் காதலை எனக்குள் தந்தாய்..
காதலையும் கொண்டு வந்தேன் .
கண்ணே தாயாகவே மாறிப் போனாய்..
எத்தகைய தவமும் செய்வேன்
அன்பே இத்தைகைய வரம் ஒன்றிற்காக..
எத்தனை ஜென்மம் கொண்டாலும்
அழகே எனக்காக நீயும் வேண்டும்..
என் உறவாக.. என் உயிராக..
என் அன்னை..
மொழியே உன் இனிமையை
அவள் பேசியபோதே உணர்ந்தேன்..
இசையே உன் இனிமையை
அவள் பாடியபோதே உணர்ந்தேன்..
வாழ்வே உன் இனிமையை
அவளின் கரம்பற்றியபோதே உணர்ந்தேன்..
அன்பே உன் இனிமையை
அவள் அணைப்பில்தான் உணர்ந்தேன்..
அமுதே உன் இனிமையை
அவள் ஊட்டியபோதே உணர்ந்தேன்..
அறிவே உன் இனிமையை
அவள் புகட்டியபோதே உணர்ந்தேன்..
இறைவா உன் இனிமையை
அவளை என் தாயாகக் கொடுத்தபோதே உணர்ந்தேன்..
அவள் பேசியபோதே உணர்ந்தேன்..
இசையே உன் இனிமையை
அவள் பாடியபோதே உணர்ந்தேன்..
வாழ்வே உன் இனிமையை
அவளின் கரம்பற்றியபோதே உணர்ந்தேன்..
அன்பே உன் இனிமையை
அவள் அணைப்பில்தான் உணர்ந்தேன்..
அமுதே உன் இனிமையை
அவள் ஊட்டியபோதே உணர்ந்தேன்..
அறிவே உன் இனிமையை
அவள் புகட்டியபோதே உணர்ந்தேன்..
இறைவா உன் இனிமையை
அவளை என் தாயாகக் கொடுத்தபோதே உணர்ந்தேன்..
Subscribe to:
Posts (Atom)