Monday, November 22, 2010

வெற்றி..

                              வீழ்வதற்கே வாழ்கை என்றால்..
                              வாழ்வது எதற்கு..
                              எழுந்து நில்..
                              துணிந்து போராடு..
                              தொட்டு விடும்  தூரத்தில்
                              உன்னை வெற்றி துரத்தி வரும்.. 

Tuesday, November 16, 2010

என் அன்பே உனக்காக.. (7)

                           அவள் ஈர விழிகளில் நீர்த்துளிகள்..
                           தேடுகிறேன் தென்றலை..
                           அவள் கண்களை தீண்டிய
                           கொடியது எதுவென கேட்க..

Friday, September 17, 2010

அழியா காதல் கவி இது..

ஆயிரம் இரவுகளைக்  கழித்துவிட்டேனடி..
கனவுகளிலே உன் கரம் பற்றி..
ஆயிரம் உறவுகளை ஒதுக்கிவிட்டேனடி..
உன்னோருத்தி உறவே போதுமென்று..
ஆயிரம் தருணங்களை இழந்துவிட்டேனடி..
என் காதல் முழுவதையும் கொட்டிவிட வாய்ப்பிருந்தும்..
ஆயிரம் ஜென்மமும் பிறந்திருப்பேனடி..
உன்னை மனம் முடிக்கும் முடிவோடு..
என் வாழ்நாள் முழுதும் காதிருப்பேனடி..
உன் விழியசைத்து எனை ஏற்றுக் கொள்வாயென…
பகலவன் நிலவிடம் நிதமும் சொல்லும் கவி இது…

வல்லரசு இந்தியா…

குடிசைகள் எல்லாம் மாளிகைகள் ஆகின்றன..
குடிசைகளை எரித்து..
குடி இருந்தவர்களை அகற்றி..

கல்லூரி நட்பு..

அன்று..
குழு குழுவாய் திரிந்தோம்..
கூத்தடித்து கிடந்தோம்..
பேசாத நாள் இல்லை..
போகாத இடம் இல்லை..
பார்க்காத படம் இல்லை..
ரசிக்காத பெண் இல்லை..
கவலைகள் ஏதும் இல்லை..
துன்பத்தை கண்டதில்லை..
இன்று..
புழு புழுவாய் நெளிகின்றோம்..
பணிகளுடன் போரிடுகிறோம்..
பேசக்கூட  நேரம் இல்லை..
பார்ப்பதற்கும் வழி இல்லை..
என்றாவது இணைக்கின்றது
நாம் அன்று இணைந்து வாங்கிய
கைபேசி..
புது நண்பர்கள் கிடைத்தாலும்..
உயிர் நண்பர்களுக்கு ஈடாகுமோ..
தோழர்களே..
தொலைதூரம் போனாலும்..
தொடர்புடன் நாம் நட்பு கொள்வோம்… 

வள்ளுவரும் வினோத்தும்..

       திருக்குறளுக்கு யார் யாரோ தெளிவுரை எழுதிருக்காங்க..
ஆனா பாருங்க அதெல்லாம் திருக்குறள விட குழப்புது..
நேத்து MTC bus  போகும்போது ஒரு குறளைப் படிச்சேன்..அப்போதான் தமிழ்கிறுக்கனான எனக்கு இந்த சந்ததிகளுக்கு  
ஏத்தது போல தெளிவா விளக்கம் எழுதலாமேன்னு தோனிச்சு..
விதி யார விட்டது.. இதையும் நீங்க படிச்சுதானே ஆகணும்..

பின்குறிப்பு:பாப்பையா  sir, தயவுசெஞ்சு என்ன மன்னிச்சுடுங்க..

நாம start பண்ணலாமா..

Voice 1:(He.. He.. குறள்  (தமிழ்ல  என்றால் ஒன்று) .. )

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக்  காய் கவர்ந்தற்று.

நம்ம Explanation:
Wifekkita மானே தேனேன்னு தாஜா  பண்ணமா  ஓவரா  சவுண்ட்
விட்டீனா மகனே வீட்ட சாத்திகிட்டு உனக்கு ஊமைகுத்தா விடுவான்னு  வள்ளுவர் சொல்லிருக்காரு..
(
சத்தியமா நான் சொல்லல

Voice 2:

யான்  நோக்குங்கால் நிலம்நோக்கும் நோக்காக்கால்
 
தான் நோக்கி மெல்ல நகரும்.

நம்ம Explanation:
இதுதாங்க 2000 வருஷத்துக்கு முன்னாடியே வள்ளுவர் நம்ம தமிழ் பொண்ணுங்களபத்தி  சொல்லிருக்க  குறள்.நாம look விடும்போது என்னமோ நிமிர்ந்தே பாக்காத பொண்ணுங்க போல
scene
போட்டுகிட்டு தரையே  பார்ப்பாங்க.நாம look விடுறத நிறுத்திட்டு வேற பக்கம் பார்த்தா அவளுங்க நாம பார்க்காதத தெரிஞ்சுகிட்டு நம்மள பார்த்து விடுவாளுங்க பாருங்க look.sightna sightu அப்படி ஒரு sight.இதையும் நான் சொல்லலேங்க வள்ளுவர்தான்

Voice 3:

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்  
மெய்ப்பொருள் காண்ப  தறிவு.

நம்ம Explanation:
என்னதான் நம்ம close friend ஒரு பொண்ண  பத்தி நம்மகிட்ட  build up விட்டாலும்
நாம நேர்ல போய் கிட்ட நின்னு பார்த்துதான் அது superb figurea இல்ல சுமாரான figureanu முடிவு பண்ணனும்.

என் அன்பே உனக்காக.. (6)



கவிஞன் எல்லாம் காதலனாவதுமில்லை..
காதலன் எல்லாம் கவிஞனாவதுமில்லை..
கவிஞனாவும் காதலனாகவும்
மாறி போனேன் நான்.
என் கவிதையாகவும் காதலாகவும்
உருவம் கொண்டாய் நீ….....